Luke Bible Quiz – Dec 2025 December 27, 2025 by reach.grace146 /50 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்! 🙏🙏🙏📢 வேதமே விளக்கு பைபிள் வினாடி வினா போட்டிக்கு வரவேற்கிறோம்! 📢 மொத்த கேள்விகள்: 50 நேர வரம்பு: 25 நிமிடங்கள் வழிமுறைகள்: 1. கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்தால், உங்கள் விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். உங்கள் முழுப்பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை வழங்கவும் (கட்டாயம்), மின்னஞ்சல் ஐடி விருப்பமானது. இது வெற்றியாளர்களை எளிதில் தொடர்பு கொள்ளவும், பரிசுகளை அனுப்பவும் உதவும். 🎁✨. 2. உங்கள் விவரங்களை உள்ளிட்டு பின்பு 'Next' பொத்தானைக் கிளிக் செய்தவுடன் 25 நிமிட டைமர் தொடங்கும். 90% நேரம் கடந்துவிட்டால், டைமர் சிவப்பு நிறமாக மாறும்🔴. டைமர் 00:00 ஐ அடைந்தவுடன் வினாடி வினா தானாகவே சமர்ப்பிக்கப்படும் என்பதால், உங்கள் நேரத்தை கவனமாக நிர்வகிக்கவும். தேவனுடைய கரம் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்துவதாக!!! ஆரம்பிக்கலாம்! கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்யவும்👇👇👇 Quiz has expired (வினாடி வினா நேரம் காலாவதியானது) Luke Bible Quiz - Dec 2025 NamePhone NumberEmail 1 / 50 1. இயேசுவானவர் _______________, __________________, தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார் A. ஞானத்திலும், அறிவிலும் B. அறிவிலும், வல்லமையிலும் C. ஞானத்திலும், வளர்த்தியிலும் D. அறிவிலும், வளர்த்தியிலும் 2 / 50 2. ___________ நிறைவினால் அவனவன் வாய் பேசும். A. மனதின் B. எண்ணத்தின் C. வார்த்தைகளின் D. இருதயத்தின் 3 / 50 3. எவ்வளவு நாட்கள் கழித்து மரியாளும் யோசேப்பும் இயேசு தேவாலயத்தில் போதகர்கள் நடுவில் அமர்ந்திருப்பதைக் கண்டார்கள்? A. 2 B. 5 C. 4 D. 3 4 / 50 4. எலியாவின் நாட்களில், எவ்வளவு காலம் மழை பெய்யாமல் வானம் அடைபட்டிருந்தது? A. 1 வருஷம் 6 மாதங்கள் B. 2 வருஷம் 6 மாதங்கள் C. 3 வருஷம் 6 மாதங்கள் D. 3 வருஷம் 5 / 50 5. திபேரியுராயன் ராஜ்யபாரம்பண்ணின எந்த வருஷத்திலே யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று? A. 10வது B. 12வது C. 15வது D. 18வது 6 / 50 6. இரண்டு காசுக்கு எத்தனை அடைக்கலான் குருவிகளை விற்கப்படுகின்றன? A. 2 B. 3 C. 4 D. 5 7 / 50 7. எத்தனை வருடங்களாக பலவீனமான ஆவி நிமிரக்கூடாத ஸ்திரீக்கு இருந்தது? A. 12 B. 15 C. 18 D. 20 8 / 50 8. தொலைந்து போன வெள்ளிக்காசு உவமையில் அந்தப் ஸ்திரீயிடம் எத்தனை காசுகள் இருந்தன? A. 5 B. 8 C. 10 D. 12 9 / 50 9. எத்தனை குஷ்டரோகிகள் இயேசுவை நோக்கி சத்தமிட்டார்கள்? A. 5 B. 7 C. 10 D. 12 10 / 50 10. இயேசுவை குற்றமற்றவர் என்று பிலாத்து எத்தனை முறை அறிவித்தார்? A. 1 B. 2 C. 3 D. 4 11 / 50 11. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: தங்கள் ஆஸ்திகளால் இயேசுவுக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த ஸ்திரீகள் A. மகதலேனாள் B. மார்த்தாள் C. யோவன்னாள் D. சூசன்னாள் 12 / 50 12. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: இயேசு கற்பித்தபடி விருந்துபண்ணும்போது அழைக்க வேண்டியவர்கள் A. ஏழைகள் B. ஊனர் C. குருடர் D. அயலகத்தார் 13 / 50 13. குஷ்டரோகம் நீங்கிய நாகமான் எந்த தேசத்தைச் சேர்ந்தவர்? A. எகிப்து B. அசீரியா C. மோவாப் D. சீரியா 14 / 50 14. எந்த ஊரில் இயேசு நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரனைக் குணப்படுத்தினார்? A. நாசரேத் B. கப்பர்நகூம் C. பெத்சாயிதா D. கோராசீன் 15 / 50 15. நூற்றுக்கு அதிபதி தனது வேலைக்காரரை இயேசுவிடம் அனுப்பி, தனது வேலைக்காரனைக் குணமாக்குமாறு வேண்டினார். A. சரி B. தவறு 16 / 50 16. நான் நீதியும் தேவபக்தியும் உள்ளவன் என்று விவரிக்கப்பட்டேன், குறிப்பாக இஸ்ரவேலின் ஆறுதலுக்காகக் காத்திருந்தேன். நான் யார்? A. சிமியோன் B. அன்னாள் C. யோசேப்பு D. நிக்கோதேமு 17 / 50 17. நான் அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் ஆசாரியனாக இருந்தேன். நான் யார்? A. சிமியோன் B. அன்னா C. சகரியா D. ஏலி 18 / 50 18. இயேசுவைப் பார்க்க ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினேன். நான் யார்? A. லேவி B. பர்திமேயு C. யவீரு D. சகேயு 19 / 50 19. நான் ஆசேர் கோத்திரத்தைச் சேர்ந்த பானுவேலின் மகள், குமாரத்தி. நான் யார்? A. எலிசபெத்து B. அன்னாள் C. மரியாள் D. யோவன்னாள் 20 / 50 20. நான் பருக்கள் நிறைந்த ஒரு தரித்திரனாக இருந்தேன், இறந்த பிறகு ஆறுதல் பெற்றேன். நான் யார்? A. பர்திமேயு B. லாசரு C. சகேயு D. சீமோன் 21 / 50 21. "தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை" என்று யார் யாரிடம் சொன்னது? A. காபிரியேல் மரியாளிடம் B. எலிசபெத்து மரியாளிடம் C. காபிரியேல் சகரியாவிடம் D. மரியாள் எலிசபெத்திடம் 22 / 50 22. "வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா?" என்று யார் யாரிடம் சொன்னது? A. பரிசேயர் இயேசுவினிடத்தில் B. யோவான் இயேசுவினிடத்தில் C. யோவானின் சீஷர்கள் இயேசுவினிடத்தில் D. சதுசேயர் இயேசுவினிடத்தில் 23 / 50 23. "போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும்" என்று யார் யாரிடம் சொன்னது? A. தலைவன் இயேசுவினிடத்தில் B. நியாயசாஸ்திரி இயேசுவினிடத்தில் C. வேதபாரகர் இயேசுவினிடத்தில் D. பரிசேயர் இயேசுவினிடத்தில் 24 / 50 24. "உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள்" என்று யார் யாரிடம் சொன்னது? A. யோவான் ஆயக்காரரிடம் B. யோவான் போர்சேவகரிடம் C. யோவான் பரிசேயரிடம் D. இயேசு ஆயக்காரரிடம் 25 / 50 25. "நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்" என்று யார் யாரிடம் சொன்னது? A. நியாயசாஸ்திரி இயேசுவினிடத்தில் B. பேதுரு இயேசுவினிடத்தில் C. தலைவன் இயேசுவினிடத்தில் D. வேதபாரகர் இயேசுவினிடத்தில் 26 / 50 26. இயேசு அவர்களிடம் பேசுவதற்கு முன்பு சீமோனும் மற்றவர்களும் எந்த நேரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள்? A. காலை B. நண்பகல் C. மாலை D. இரவு 27 / 50 27. இயேசுவை விருந்துக்கு அழைத்த சீமோன் யார்? A. பரிசேயன் B. சதுசேயன் C. வேதபாரகன் D. ஆசாரியன் 28 / 50 28. இயேசு பிறந்தபோது சிரியாவின் தேசாதிபதி யார்? A. பிலாத்து B. ஏரோது C. அகஸ்து D. சிரேனியு 29 / 50 29. இயேசுவின் போதனைகளுக்கு நாசரேத்து மக்கள் எவ்வாறு பிரதிபலித்தனர்? A. அவரைப் புகழ்ந்தார்கள் B. அவரை நிராகரித்தார்கள் C. அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள் D. அவரைப் வணங்கினர் 30 / 50 30. யோவன்னாள் யாருடைய மனைவி? A. ஆசாரியன் B. ஆயக்காரன் C. நூற்றுக்கு அதிபதி D. ஏரோதின் காரியக்காரன் 31 / 50 31. இயேசுவின் வம்சாவளியை லூக்கா யாரிடமிருந்து பின்னோக்கிச் செல்கிறார்? A. ஆபிரகாம் B. தாவீது C. நோவா D. ஆதாம் 32 / 50 32. எந்த அப்போஸ்தலன் குறிப்பாக "செலோத்தே" என்று அழைக்கப்படுகிறார்? A. மத்தேயு B. சீமோன் C. யூதா D. அந்திரேயா 33 / 50 33. இயேசு முதலில் திமிர்வாதக்காரனிடம் என்ன சொன்னார்? A. உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது B. எழுந்து நட C. சுகமாயிரு D. உன் படுக்கையை எடு 34 / 50 34. பன்னிரண்டு அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு இயேசு என்ன செய்தார்? A. இராமுழுதும் ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார் B. உபவாசித்தார் C. போதித்தார் D. நோயாளிகளை சுகமாக்கினார் 35 / 50 35. ஏழு பேய்கள் வெளியேற்றப்பட்டதாக குறிப்பாக குறிப்பிடப்பட்ட பெண் யார்? A. யோவன்னாள் B. சூசன்னாள் C. மகதலேனாள் மரியாள் D. சலோமி 36 / 50 36. கற்பாறையில் விழுந்த விதை என்ன ஆனது? A. மிதியுண்டது B. ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது C. உலர்ந்துபோயிற்று D. பறவைகள் பட்சித்துப்போட்டது 37 / 50 37. காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அடக்கிய பிறகு இயேசு தம் சீடர்களிடம் என்ன கேள்வி கேட்டார்? A. ஏன் பயந்தீர்கள்? B. உங்கள் விசுவாசம் எங்கே? C. உங்களுக்கு இன்னும் சந்தேகமா? D. நான் யார் என்கிறீர்கள்? 38 / 50 38. எந்த அளவு விசுவாசம் ஒரு காட்டத்திமரத்தை வேரோடு பிடுங்க முடியும்? A. மணல் தானியம் B. எண்ணெய் துளி C. கடுகுவிதை D. ரொட்டி துண்டு 39 / 50 39. மனுஷகுமாரனைப் பற்றி இயேசு என்ன கேள்வி கேட்டார்? A. அவர் ஆளுவாரா? B. நியாயம் தீர்ப்பாரா ? C. அவர் உபத்திரவப்படுவாரா? D. விசுவாசத்தைக் காண்பாரோ? 40 / 50 40. பயணத்திற்கு எதை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று சீடர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது? A. தடி B. காசு C. அப்பம் D. மேலே உள்ள அனைத்தும் 41 / 50 41. பரிசேயர் எத்தனை முறை உபவாசித்தார் ? A. தினமும் B. வாரத்தில் இரண்டுதரம் C. வாரந்தோறும் D. மாதந்தோறும் 42 / 50 42. உயிர்த்தெழுந்த பிறகு சீடர்களுக்கு இயேசு தோன்றியபோது அவர் என்ன வாழ்த்துச் சொல்லைப் பயன்படுத்தினார்? A. பயப்படாதேயுங்கள் B. மகிழுங்கள் C. உங்களுக்குச் சமாதானம் D. பலப்படுங்கள் 43 / 50 43. இயேசுவைப் பின்பற்ற ஒருவர் என்ன செய்ய வேண்டும்? A. தன்னைத் தான் வெறுக்க வேண்டும் B. தினமும் ஜெபிக்க வேண்டும் C. உதவி செய்ய வேண்டும் D. உபவாசிக்க வேண்டும் 44 / 50 44. அநீதியான உக்கிராணக்காரன் உவமையை இயேசு யாருக்குப் பேசினார்? A. பரிசேயர் B. சீஷர்கள் C. வேதபாரகர் D. மூப்பர் 45 / 50 45. எழுபது பேர் பட்டணங்களுக்குள்ளே எவ்வாறு அனுப்பப்பட்டனர்? A. ஓநாய்களுக்கு மத்தியில் ஆடுகளைப் போல B. ஓநாய்களுக்கு மத்தியில் ஆட்டுக்குட்டிகளைப் போல C. எஜமானர்களிடையே வேலைக்காரர்களாக D. சர்ப்பங்களுக்கு மத்தியில் புறாக்களைப் போல 46 / 50 46. யார் போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறமாகச் சுத்தம் செய்கிறார்கள், ஆனால் உள்ளமோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது? A. சதுசேயர் B. வேதபாரகர் C. பரிசேயர் D. யூதர்கள் 47 / 50 47. பாவங்களை மன்னிக்கும் இயேசுவின் அதிகாரத்தை யார் கேள்வி கேட்டனர்? A. ஜனக்கூட்டம் B. சீஷர்கள் C. வேதபாரகரும் பரிசேயரும் D. சதுசேயர் 48 / 50 48. சரீரத்தின் விளக்கு எது? A. இதயம் B. மனம் C. ஆத்துமா D. கண் 49 / 50 49. எது சாரமற்றுப்போனால் நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது? A. சீரகம் B. உப்பு C. மண் D. விதை 50 / 50 50. இயேசு பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களுடன் சாப்பிட்டார் என்று யார் புகார் கூறினார்கள்? A. பரிசேயர்கள் மற்றும் வேதபாரகர்கள் B. பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள் C. வேதபாரகர்களும் மூப்பர்களும் D. யூதர்கள் மற்றும் வேதபாரகர்கள் By Wordpress Quiz plugin
Good