John Bible Quiz – Apr 2026 April 25, 2026 by reach.grace146 /50 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்! 🙏🙏🙏📢 வேதமே விளக்கு பைபிள் வினாடி வினா போட்டிக்கு வரவேற்கிறோம்! 📢 மொத்த கேள்விகள்: 50 நேர வரம்பு: 25 நிமிடங்கள் வழிமுறைகள்: 1. கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்தால், உங்கள் விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். உங்கள் முழுப்பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை வழங்கவும் (கட்டாயம்), மின்னஞ்சல் ஐடி விருப்பமானது. இது வெற்றியாளர்களை எளிதில் தொடர்பு கொள்ளவும், பரிசுகளை அனுப்பவும் உதவும். 🎁✨. 2. உங்கள் விவரங்களை உள்ளிட்டு பின்பு 'Next' பொத்தானைக் கிளிக் செய்தவுடன் 25 நிமிட டைமர் தொடங்கும். 90% நேரம் கடந்துவிட்டால், டைமர் சிவப்பு நிறமாக மாறும்🔴. டைமர் 00:00 ஐ அடைந்தவுடன் வினாடி வினா தானாகவே சமர்ப்பிக்கப்படும் என்பதால், உங்கள் நேரத்தை கவனமாக நிர்வகிக்கவும். தேவனுடைய கரம் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்துவதாக!!! ஆரம்பிக்கலாம்! கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்யவும்👇👇👇 Quiz has expired (வினாடி வினா நேரம் காலாவதியானது) John Bible Quiz - Apr 2026 NamePhone NumberEmail 1 / 50 1. வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய ______________ A. அப்பம் B. வார்த்தை C. வரம் D. குமாரன் 2 / 50 2. அந்த வார்த்தை மாம்சமாகி, ______________ __________________ நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார் A. இரக்கத்தினாலும் சத்தியத்தினாலும் B. கிருபையினாலும் சத்தியத்தினாலும் C. சத்தியத்தினாலும் பரிசுத்தத்தினாலும் D. சத்தியத்தினாலும் கிருபையினாலும் 3 / 50 3. அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் __________ வந்தவனாயிருந்தான் A. சாட்சியம் கொடுக்க B. ஆதாரம் கொடுக்க C. சாட்சிகொடுக்க D. வெளிப்பாடு கொடுக்க 4 / 50 4. நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற _____________________ A. நதியாயிருக்கும் B. நீரூற்றாயிருக்கும் C. கிணறாயிருக்கும் D. ஓடையாயிருக்கும் 5 / 50 5. அவருடைய __________ நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம் A. மிகுதியினால் B. கிருபையினால் C. ஐசுவரியத்தினால் D. பரிபூரணத்தினால் 6 / 50 6. யோவான் சுவிசேஷத்தின் படி, தோமா வேறு எந்தப் பெயரால் அழைக்கப்பட்டான்? A. கேபா B. திதிமு C. பெத்தானி D. பர்னபா 7 / 50 7. "இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்", என்று இயேசு யாரைப் பற்றி சொன்னார்? A. பிலிப்பு B. அந்திரேயா C. நாத்தான்வேல் D. பேதுரு 8 / 50 8. பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள்; நீங்கள் நம்புகிற _________ உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான் A. ஆபிரகாம் B. யாக்கோபு C. மோசே D. தாவீது 9 / 50 9. “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்” என்று இயேசு யாருக்குச் சொன்னார்? A. பேதுரு B. யூதர் C. பரிசேயர் D. நிக்கோதேமு 10 / 50 10. “எரிந்து பிரகாசிக்கிற விளக்கு” என்று யாரைக் குறித்து சொல்லப்பட்டது? A. யோவான் ஸ்நானன் B. இயேசு C. பேதுரு D. எலியா 11 / 50 11. யோவான் ஸ்நானனுடைய சொற்களை கேட்டுப் இயேசுவைப் பின்பற்றிய இருவரில் ஒருவன் யார்? A. அந்திரேயா B. பேதுரு C. பிலிப்பு D. நாத்தான்வேல் 12 / 50 12. “இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம்” என்று இயேசு யாரிடத்தில் கேட்டார்? A. அந்திரேயா B. பேதுரு C. பிலிப்பு D. தோமா 13 / 50 13. இரு சீஷர்கள் இயேசு தங்கியிருந்த இடத்துக்குச் சென்று, அந்த நாளில் அவருடனே தங்கிய நேரம் எது? A. ஆறாம் மணி B. ஒன்பதாம் மணி C. பத்தாம் மணி D. பதினொன்றாம் மணி 14 / 50 14. ஐயாயிரம் பேருக்கு உணவளித்த பின்பு மீதமிருந்த துணிக்கைகள் எத்தனை கூடைகளில் நிரப்பினார்கள்? A. 7 B. 9 C. 10 D. 12 15 / 50 15. சமாரியர் இயேசுவைத் தங்களிடத்தில் தங்கும்படி வேண்டியபோது, அவர் அங்கே எத்தனை நாள் தங்கினார்? A. 5 நாட்கள் B. 4 நாட்கள் C. 3 நாட்கள் D. 2 நாட்கள் 16 / 50 16. கானாவில் நடந்த கலியாணத்தில், யூதரின் சுத்திகரிப்பு முறைக்கேற்ப எத்தனை கற்சாடிகள் வைக்கப்பட்டிருந்தன? A. 4 B. 5 C. 6 D. 7 17 / 50 17. சமாரிய ஊருக்கு வந்தபோது, இயேசு யாக்கோபுடைய கிணற்றருகில் உட்கார்ந்திருந்த நேரம் எது? A. ஆறாம் மணி B. ஒன்பதாம் மணி C. பத்தாம் மணி D. பதினொன்றாம் மணி 18 / 50 18. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: யோவான் சுவிசேஷத்தில் பதிவு செய்யப்பட்ட அற்புதங்கள் A. தண்ணீர் திராட்சரசமாக மாற்றப்பட்டது B. ஊனமுற்றவன் குணமாக்கப்பட்டது C. லாசரு உயிர்த்தெழுப்பப்பட்டது D. யாவீருவின் மகள் உயிர்ப்பிக்கப்பட்டது 19 / 50 19. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: நானே என்ற சொற்றொடர் A. ஜீவ அப்பம் நானே B. நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் C. நானே மனுஷகுமாரன் D. நான் மெய்யான திராட்சச்செடி 20 / 50 20. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: யோவான் சுவிசேஷத்தில் இயேசுவுடன் தனிப்பட்ட முறையில் உரையாடியவர்கள் A. நிக்கோதேமு B. சகேயு C. நாத்தான்வேல் D. சமாரிய ஸ்திரி 21 / 50 21. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: யோவான் சுவிசேஷத்தில் இயேசுவுக்குக் கொடுக்கப்பட்ட பட்டங்கள் A. தாவீதின் குமாரன் B. இஸ்ரவேலின் ராஜா C. தேவ ஆட்டுக்குட்டி D. தேவனுடைய குமாரன் 22 / 50 22. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: யோவான் சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்ட சீஷர்கள் A. அந்திரேயா B. யாக்கோபு C. பிலிப்பு D. நாத்தான்வேல் 23 / 50 23. எருசலேமில் “பெதஸ்தா” எனப்படும் குளம் எந்த வாசலருகில் இருந்தது? A. மீன் வாசல் B. ஆட்டு வாசல் C. கிழக்கு வாசல் D. நீர் வாசல் 24 / 50 24. இயேசு சொன்னார்: “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது” A. சரி B. தவறு 25 / 50 25. இயேசு ஓய்வுநாளில் குணப்படுத்தினார் என்ற ஒரே காரணத்திற்காக யூதர்கள் அவரைக் கொல்ல விரும்பினார்கள். A. சரி B. தவறு 26 / 50 26. ஐயாயிரம் பேருக்கு உணவளித்த நிகழ்வு, இயேசு தண்ணீரின்மேல் நடப்பதற்கு முன்பாக நடந்தது A. சரி B. தவறு 27 / 50 27. அதிகாரிகளின் அறிக்கையைக் கேட்ட பிறகு பரிசேயர்கள் இயேசுவை விசுவாசித்தார்கள் A. சரி B. தவறு 28 / 50 28. “உலகத்தின் ஒளி” பற்றிய போதனைக்குப் பின்பு சில சீஷர்கள் இயேசுவைப் பின்பற்றுவதை நிறுத்தினர் A. சரி B. தவறு 29 / 50 29. “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” — இந்த வசனம் எங்கே உள்ளது? A. யோவான் 10:7 B. யோவான் 14:6 C. யோவான் 14:7 D. யோவான் 8:12 30 / 50 30. “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை” — இந்த வசனம் எங்கே உள்ளது? A. யோவான் 10:7 B. யோவான் 12:26 C. யோவான் 18:7 D. யோவான் 14:27 31 / 50 31. “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்” — இந்த வசனம் எங்கே உள்ளது? A. யோவான் 5:6 B. யோவான் 3:5 C. யோவான் 4:5 D. யோவான் 6:6 32 / 50 32. “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு” — இந்த வசனம் எங்கே உள்ளது? A. யோவான் 5:6 B. யோவான் 6:24 C. யோவான் 5:24 D. யோவான் 6:6 33 / 50 33. “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா”, என்று யார் யாரிடம் சொன்னது? A. பிலிப்பு நாத்தான்வேலிடம் B. நாத்தான்வேல் பிலிப்புவிடம் C. அந்திரேயா பேதுருவிடம் D. பேதுரு பிலிப்புவிடம் 34 / 50 34. "ஒருவன் தன்னை வெளிப்படையாக அறியப்படவே நாடுகிறானே தவிர, எதையும் இரகசியமாகச் செய்வதில்லை" என்பதை இயேசுவிடம் சொன்னது யார்? A. யூதர் B. மூப்பர்கள் C. பரிசேயர் D. அவருடைய சகோதரர் 35 / 50 35. “அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை” , என்று யார் யாரிடம் சொன்னது? A. சேவகர் பிரதான ஆசாரியருக்கும் பரிசேயருக்கும் சொன்னார்கள் B. பரிசேயர் பிரதான ஆசாரியருக்குச் சொன்னார்கள் C. படைவீரர் பிரதான ஆசாரியருக்குச் சொன்னார்கள் D. ஜனங்கள் பரிசேயருக்குச் சொன்னார்கள் 36 / 50 36. நான் அந்திரேயாவும் பேதுருவும் இருந்த பெத்சாயிதா ஊரிலிருந்தவன். நான் யார்? A. தோமா B. பிலிப்பு C. நாத்தான்வேல் D. யோவான் 37 / 50 37. நான் வெளிப்படையாகச் செயல்படத் தயங்கினேன்; பயந்திருந்தேன்; ஆனாலும் இயேசுவின் அடக்கத்தில் உதவி செய்தேன். நான் யார்? A. நிக்கோதேமு B. அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு C. யோவான் D. மக்தலேனா மரியாள் 38 / 50 38. நான் பரிசேயனும் யூதரின் அதிகாரியுமானவன். நான் யார்? A. நிக்கோதேமு B. அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு C. கமாலியேல் D. காய்பா 39 / 50 39. “இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு” என்று நான் சொன்னேன். நான் யார்? A. பிலிப்பு B. அந்திரேயா C. பேதுரு D. தோமா 40 / 50 40. நான் முதலில் சந்தேகித்தேன்; இயேசுவைச் சந்திப்பதற்கு முன் மரத்தடியில் காணப்பட்டேன்; பின்னர் அவரை தேவனுடைய குமாரன் என்று ஒப்புக்கொண்டேன். நான் யார்? A. பிலிப்பு B. தோமா C. நாத்தான்வேல் D. அந்திரேயா 41 / 50 41. நான் “இது எப்படி ஆகும்?” என்று கேட்டேன்; ஆவிக்குரிய பிறப்பை அறியாமல் இருந்தேன்; பின்னர் இயேசுவுக்காகப் பேசினேன். நான் யார்? A. நிக்கோதேமு B. நாத்தான்வேல் C. பிலாத்து D. காய்பா 42 / 50 42. யோவான் சுவிசேஷத்தின் படி, பிதாவின் சித்தமல்லாதவை எவை? (இரண்டைத் தேர்ந்தெடுக்கவும்) A. அவர் தமக்குக் தந்தவைகளில் ஒன்றையும் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே B. குமாரனைப் பார்த்து அவரில் விசுவாசிப்பவர்கள் உடனே நியாயந்தீர்ப்புக்குள்ளாக வேண்டும் C. அவர் தமக்குக் தந்தவைகளில் ஒன்றையும் இழந்துபோகாமல், விசுவாசிகளை கடைசிநாளில் எழுப்புவதே D. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைய வேண்டும் 43 / 50 43. பண்டிகையின் எந்த நேரத்தில் இயேசு ஆலயத்திற்குள் போய் உபதேசிக்கத் தொடங்கினார்? A. பண்டிகையின் ஆரம்பத்தில் B. பண்டிகையின் நடுப்பகுதியில் C. பண்டிகையின் முடிவில் D. கடைசி நாளில் 44 / 50 44. பின்வருவனவற்றில் ஐந்தாவது “நான்” (I AM) சொற்றொடர் எது? A. நான் மெய்யான திராட்சச்செடி B. நான் நல்ல மேய்ப்பன் C. ஜீவ அப்பம் நானே D. நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் 45 / 50 45. “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்” என்று யார் சொன்னார்கள்? A. கிரேக்கர் B. ரோமர் C. பரிசேயர் D. சமாரியர் 46 / 50 46. “ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம்” என்று யார் சொன்னார்? A. பிலிப்பு B. தோமா C. பேதுரு D. யோவான் 47 / 50 47. இயேசு கைது செய்யப்பட்டபின் முதலில் யாரிடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்? A. காய்பா B. பிலாத்து C. ஏரோது D. அன்னா 48 / 50 48. பண்டிகையின் போது இயேசு ஆலயத்தில் போதிக்கத் தொடங்கியபோது, “இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார்” என்று ஆச்சரியப்பட்டவர்கள் யார்? A. பரிசேயர் B. மூப்பர் C. யூதர் D. வேதபாரகர் 49 / 50 49. “சத்தியமாவது என்ன” என்று யார் கேட்டார்? A. காய்பா B. பிலாத்து C. ஏரோது D. அன்னா 50 / 50 50. “ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும்” என்று இயேசுவிடம் கேட்டவர் யார்? A. அந்திரேயா B. யோவான் C. பிலிப்பு D. பேதுரு By Wordpress Quiz plugin
Finished