Joshua Bible Quiz – Feb 2026 February 28, 2026 by reach.grace146 /50 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்! 🙏🙏🙏📢 வேதமே விளக்கு பைபிள் வினாடி வினா போட்டிக்கு வரவேற்கிறோம்! 📢 மொத்த கேள்விகள்: 50 நேர வரம்பு: 25 நிமிடங்கள் வழிமுறைகள்: 1. கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்தால், உங்கள் விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். உங்கள் முழுப்பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை வழங்கவும் (கட்டாயம்), மின்னஞ்சல் ஐடி விருப்பமானது. இது வெற்றியாளர்களை எளிதில் தொடர்பு கொள்ளவும், பரிசுகளை அனுப்பவும் உதவும். 🎁✨. 2. உங்கள் விவரங்களை உள்ளிட்டு பின்பு 'Next' பொத்தானைக் கிளிக் செய்தவுடன் 25 நிமிட டைமர் தொடங்கும். 90% நேரம் கடந்துவிட்டால், டைமர் சிவப்பு நிறமாக மாறும்🔴. டைமர் 00:00 ஐ அடைந்தவுடன் வினாடி வினா தானாகவே சமர்ப்பிக்கப்படும் என்பதால், உங்கள் நேரத்தை கவனமாக நிர்வகிக்கவும். தேவனுடைய கரம் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்துவதாக!!! ஆரம்பிக்கலாம்! கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்யவும்👇👇👇 Quiz has expired (வினாடி வினா நேரம் காலாவதியானது) Joshua Bible Quiz - Feb 2026 NamePhone NumberEmail 1 / 50 1. நான் ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தேன். நான் யார்? A. தேபீர் B. அர்பா C. கிலேயாத் D. காலேப் 2 / 50 2. நான் யுத்தமனுஷனானபடியினால், கீலேயாத்தும் பாசானும் எனக்கு கிடைத்தது. நான் யார்? A. மாகீர் B. காலேப் C. கிலேயாத் D. ஆனாக் 3 / 50 3. நான் எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள திம்நாத்-சேராவில் அடக்கம் செய்யப்பட்டேன். நான் யார்? A. எலெயாசார் B. காலேப் C. யோசுவா D. சாதோக் 4 / 50 4. நான் ஆகானின் தந்தை. நான் யார்? A. கர்மி B. சப்தி C. சேராக் D. எஸ்ரோன் 5 / 50 5. யோசுவாவின் காலத்தில் நான் பிரதான ஆசாரியனாக இருந்தேன், தேசத்தைப் பிரிப்பதற்கு உதவினேன். நான் யார்? A. அபியத்தார் B. ஏலி C. சாதோக் D. எலெயாசார் 6 / 50 6. நான் மலைநாட்டை கேட்டுக்கொண்டு, ஆனாக்கின் புத்திரரைத் துரத்தினேன். நான் யார்? A. யோசுவா B. காலேப் C. ஆகான் D. எலியேசர் 7 / 50 7. நான் எருசலேமின் ராஜாவாக இருந்து, கிபியோனுக்கு விரோதமாக மற்ற நான்கு ராஜாக்களை நடத்தினேன். நான் யார்? A. பீராம் B. ஹோகாம் C. அதோனிசேதேக் D. யாபியா 8 / 50 8. "நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன", என்று யார் யாரிடம் சொன்னது? A. செபுலோன் புத்திரர் யோசுவாவுக்குச் சொன்னார்கள் B. ஆசேர் புத்திரர் யோசுவாவுக்குச் சொன்னார்கள் C. யோசேப்பின் புத்திரர் யோசுவாவுக்குச் சொன்னார்கள் D. நப்தாலி புத்திரர் யோசுவாவுக்குச் சொன்னார்கள் 9 / 50 9. "அப்படியல்ல, நாங்கள் கர்த்தரையே சேவிப்போம்", என்று யார் யாரிடம் சொன்னது? A. இஸ்ரவேலர் யோசுவாவுக்குச் சொன்னார்கள் B. அமோரியர் யோசுவாவுக்குச் சொன்னார்கள் C. கிபியோனியர் யோசுவாவுக்குச் சொன்னார்கள் D. தேபீர் யோசுவாவுக்குச் சொன்னான் 10 / 50 10. "நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள், எங்களோடே உடன்படிக்கைபண்ணுங்கள்", என்று யார் யாரிடம் சொன்னது? A. அமோரியர் யோசுவாவுக்குச் சொன்னார்கள் B. கிபியோனியர் யோசுவாவுக்குச் சொன்னார்கள் C. யாபியா யோசுவாவுக்குச் சொன்னான் D. தேபீர் யோசுவாவுக்குச் சொன்னான் 11 / 50 11. "நீங்கள் கிட்டவந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள்", என்று யார் யாரிடம் சொன்னது? A. அதோனிசேதேக் தன் படைவீரருக்குச் சொன்னான் B. யோசுவா மூப்பருக்குச் சொன்னார் C. யோசுவா படைவீரருக்குச் சொன்னார் D. யோசுவா யுத்தமனுஷரின் அதிபதிகளிடம் சொன்னார் 12 / 50 12. "எங்கள் ஜீவனே உங்கள் ஜீவனுக்கு ஈடு; நீங்கள் எங்கள் காரியத்தை வெளிப்படுத்தாதிருந்தால்", என்று யார் யாரிடம் சொன்னது? A. யோசுவா கிபியோனியரிடம் B. மூப்பர்கள் யோசுவாவிடம் C. வேவுகாரர் ராகாபிடம் D. மூப்பர்கள் வேவுகாரரிடம் 13 / 50 13. "உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்", இது எந்த வசனத்தில் உள்ளது? A. யோசுவா 3:6 B. யோசுவா 3:5 C. யோசுவா 3:4 D. யோசுவா 3:3 14 / 50 14. மூன்றாம் சீட்டு எந்த கோத்திரத்திற்குப் விழுந்தது? A. சிமியோன் B. நப்தாலி C. செபுலோன் D. ஆசேர் 15 / 50 15. ஆகான் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்? A. பென்யமீன் B. எப்பிராயீம் C. யூதா D. மனாசே 16 / 50 16. ஆயி பேத்தேலின் மேற்கு பக்கத்தில் இருந்தது A. சரி B. தவறு 17 / 50 17. இஸ்ரவேலர் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளே மன்னா நிறுத்தப்பட்டது A. சரி B. தவறு 18 / 50 18. ஐந்து எமோரிய ராஜாக்கள் எந்த குகையில் மறைந்துகொண்டார்கள்? A. மக்பேலா B. மக்கேதா C. அதுல்லாம் D. என்கெதி 19 / 50 19. யோசுவா தன் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, உருவிய பட்டயத்துடன் தனக்கு எதிரே ஒருவர் நிற்பதை கண்ட நகரம் எது? A. ஆயி B. பேத்தேல் C. கர்மேல் D. எரிகோ 20 / 50 20. எரிகோவைப் பார்வையிட யோசுவா எங்கிருந்து ரகசியமாக வேவுகாரர்களை அனுப்பினார்? A. சித்தீம் B. பேத்தேல் C. கர்மேல் D. தான் 21 / 50 21. யோசுவாவுக்குச் சுதந்தரமாக வழங்கப்பட்ட பட்டணம் எது? A. திம்நாத்-சேரா B. எப்ரோன் C. எரிகோ D. சீலோ 22 / 50 22. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: ஆகான் திருடியவை A. இருநூறு வெள்ளிச்சேக்கல் B. பாபிலோனிய சால்வை C. 100 சேக்கல் வெண்கலம் D. ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளம் 23 / 50 23. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: கிபியோனியர் எடுத்துச் சென்றவை A. பழைய வஸ்திரங்ள் B. பழைய பாதரட்சைகள் C. பழைய பழங்கள் D. பழைய திராட்சரசத் துருத்திகள் 24 / 50 24. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: எமோரியர் ராஜாக்கள் A. ஓக் B. யப்பியா C. பீராம் D. ஓகாம் 25 / 50 25. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: ஆனாக்கின் புத்திரர் A. சேசாய் B. தேபீர் C. தல்மாய் D. அகீமான் 26 / 50 26. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: செலொப்பியாத்தின் குமாரத்திகள் A. மக்லாள் B. நோவாள் C. ஒக்லாள் D. சேமிதாள் 27 / 50 27. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: இவை கர்த்தருடைய ஆலயப் பொக்கிஷத்தில் வைக்கப்பட்டன. A. இரும்பு B. பிளாட்டினம் C. வெண்கலம் D. வெள்ளி 28 / 50 28. பெத்தேலுக்கும் ஆயிக்கும் இடையில் எத்தனை பேரை யோசுவா அழைத்துச் சென்று பதுங்க வைத்தார்? A. 3000 B. 4000 C. 5000 D. 6000 29 / 50 29. யோர்தானுக்கு மேற்கு பக்கத்தில் யோசுவாவும் இஸ்ரவேலரும் தோற்கடித்த ராஜாக்கள் எத்தனை? A. 27 B. 30 C. 32 D. 31 30 / 50 30. மோசே காலேபை காதேஸ் பர்னேயாவிலிருந்து தேசத்தை வேவு பார்க்க அனுப்பியபோது அவருக்கு எத்தனை வயது? A. 30 B. 35 C. 40 D. 45 31 / 50 31. மீதமிருந்த தேசம் சீராய்ந்து பங்கிடப்படுவதற்கு முன் எத்தனை பங்குகளாகப் பிரிக்கப்பட்டது ? A. 6 B. 7 C. 8 D. 9 32 / 50 32. யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியருடைய புத்திரரிடத்தில் இருந்து நிலத்தை எத்தனை வெள்ளிக்காசுகளுக்குக் வாங்கினார்? A. 50 B. 75 C. 100 D. 120 33 / 50 33. யோசுவா எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்? A. 105 B. 110 C. 115 D. 120 34 / 50 34. ஆயி மனுஷர் இஸ்ரவேலரில் எத்தனை பேரை அடித்துக்கொன்றார்கள்? A. 30 B. 26 C. 36 D. 46 35 / 50 35. எரிகோ மதில் இடிந்து விழுவதற்கு முன் இஸ்ரவேலர் மொத்தம் எத்தனை தடவை அதைச் சுற்றினார்கள்? A. 7 B. 10 C. 12 D. 13 36 / 50 36. எரிகோ சமவெளிக்கு கர்த்தருக்குமுன் யுத்தத்திற்காக எத்தனை பேர் ஆயத்தமாய்ப் புறப்பட்டார்கள்? A. 40000 B. 30000 C. 20000 D. 10000 37 / 50 37. யோர்தானின் நடுவில் யோசுவா எத்தனை கற்களை நிறுத்தினார்? A. 3 கற்கள் B. 6 கற்கள் C. 7 கற்கள் D. 12 கற்கள் 38 / 50 38. யோசுவாவிடத்திற்குத் திரும்புவதற்கு முன் இரண்டு வேவுகாரரும் மலைப்பகுதியில் எத்தனை நாள் தங்கியிருந்தார்கள்? A. 1 B. 2 C. 3 D. 4 39 / 50 39. காலேப்பின் மகள் யார்? A. மில்காள் B. மக்லாள் C. சேமிதாள் D. அக்சாள் 40 / 50 40. கெனாஸின் மகன் யார்? A. ஆனாக் B. தேபீர் C. ஒத்னியேல் D. ஓக் 41 / 50 41. தெபீரின் முந்தைய பெயர் என்ன? A. கிரியாத் சேப்பர் B. கிரியாத் அர்பா C. கிரியாத் தேபீர் D. கிலேயாத் 42 / 50 42. எப்புன்னேயின் மகன் யார்? A. அர்பா B. ஆகான் C. யோசுவா D. காலேப் 43 / 50 43. ஆனாக்கின் தந்தை யார்? A. கிரியாத் B. யாபியா C. தேபீர் D. அர்பா 44 / 50 44. யோர்தானருகில் ரூபேன், காத் புத்திரர் கட்டிய பலிபீடத்துக்கு வைத்த பெயர் என்ன? A. உடன்படிக்கை B. வாக்குத்தத்தம் C. ஏத் D. சாட்சி 45 / 50 45. நூனின் மகன் யார்? A. காலேப் B. யோசுவா C. ஆகான் D. பினெகாஸ் 46 / 50 46. ஆசாரியனாகிய எலெயாசாரின் மகன் யார்? A. பாலாம் B. யோசுவா C. பினெகாஸ் D. பாலாக் 47 / 50 47. "நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்" என்ற வசனம் எந்த அதிகாரத்தில் உள்ளது? A. 21 B. 22 C. 23 D. 24 48 / 50 48. தோற்கடிக்கப்பட்ட ராஜாக்களின் விரிவான பட்டியல் எந்த அதிகாரத்தில் உள்ளது? A. 11 B. 12 C. 13 D. 14 49 / 50 49. சூரியனே, நீ _______ மேலும், சந்திரனே, நீ __________ பள்ளத்தாக்கின்மேலும், தரித்துநில்லுங்கள் A. ஆயி, ஆகோர் B. பேத்தேல், பாசான் C. கானான், கர்மேல் D. கிபியோன், ஆயலோன் 50 / 50 50. ஆகையால் கர்த்தருக்குப் பயந்து, அவரை _________ மற்றும் _________ சேவித்து, உங்கள் பிதாக்கள் சேவித்த தெய்வங்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள் A. விசுவாசமும் தைரியமும் B. மனச்சுத்தியும் விசுவாசமும் C. உத்தமத்தோடும் உண்மையோடும் D. விசுவாசமும் உண்மையும் By Wordpress Quiz plugin