Judges Bible Quiz – Jun 2026 June 27, 2026 by reach.grace146 /50 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்! 🙏🙏🙏📢 வேதமே விளக்கு பைபிள் வினாடி வினா போட்டிக்கு வரவேற்கிறோம்! 📢 மொத்த கேள்விகள்: 50 நேர வரம்பு: 25 நிமிடங்கள் வழிமுறைகள்: 1. கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்தால், உங்கள் விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். உங்கள் முழுப்பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை வழங்கவும் (கட்டாயம்), மின்னஞ்சல் ஐடி விருப்பமானது. இது வெற்றியாளர்களை எளிதில் தொடர்பு கொள்ளவும், பரிசுகளை அனுப்பவும் உதவும். 🎁✨. 2. உங்கள் விவரங்களை உள்ளிட்டு பின்பு 'Next' பொத்தானைக் கிளிக் செய்தவுடன் 25 நிமிட டைமர் தொடங்கும். 90% நேரம் கடந்துவிட்டால், டைமர் சிவப்பு நிறமாக மாறும்🔴. டைமர் 00:00 ஐ அடைந்தவுடன் வினாடி வினா தானாகவே சமர்ப்பிக்கப்படும் என்பதால், உங்கள் நேரத்தை கவனமாக நிர்வகிக்கவும். தேவனுடைய கரம் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்துவதாக!!! ஆரம்பிக்கலாம்! கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்யவும்👇👇👇 Quiz has expired (வினாடி வினா நேரம் காலாவதியானது) Judges Bible Quiz - Jun 2026 NamePhone NumberEmail 1 / 50 1. யோதாமின் உவமையில், "தேவர்களும் மனுஷரும் புகழுகிற என்னிலுள்ள என்கொழுமையை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ" என்று கூறிய மரம் எது? A. ஒலிவமரம் B. திராட்சைச்செடி C. அத்திமரம் D. முட்செடி 2 / 50 2. அபிமெலேக்கு சீகேம் பட்டணத்தை அழித்த பிறகு அதன் மேல் எதைத் தூவினான்? A. மணல் B. சாம்பல் C. உப்பு D. கற்கள் 3 / 50 3. ரிம்மோன் கன்மலைக்கு தப்பிச் சென்ற பென்யமீனியர் எத்தனை பேர்? A. 400 B. 500 C. 600 D. 700 4 / 50 4. சிம்சோன் இஸ்ரவேலை எத்தனை ஆண்டுகள் நியாயந்தீர்த்தார்? A. 10 B. 20 C. 30 D. 40 5 / 50 5. "ராஜாவே, உம்மிடத்தில் சொல்லவேண்டிய இரகசியமான ஒரு வார்த்தை உண்டு" இதை யார் யாரிடம் கூறினார்? A. ஒத்னியேல் கூசான்-ரிசாத்தாயீமிடம் B. சம்கார் எக்லோனிடம் C. ஏகூத் எக்லோனிடம் D. எக்லோன் ஏகூதிடம் 6 / 50 6. "இஸ்ரவேல் புத்திரரில்லாத மறுஜாதியார் இருக்கிற பட்டணத்துக்குப் போகப்படாது" இதை யார் யாரிடம் கூறினார்? A. வேலைக்காரன் லேவியனிடம் B. லேவியன் வேலைக்காரனிடம் C. முதியவர் லேவியனிடம் D. மாமனார் லேவியனிடம் 7 / 50 7. "கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார்" இதை யார் யாரிடம் கூறினார்? A. மனோவா தன் மனைவியிடம் B. சிம்சோன் மனோவாவிடம் C. மனோவாவின் மனைவி மனோவாவிடம் D. மேற்கண்ட எதுவுமில்லை 8 / 50 8. நான் கிதியோனின் முதற்பேறான மகன். சேபாவையும் சல்முன்னாவையும் கொல்லும்படி என் தந்தை என்னைக் கேட்டார். நான் யார்? A. யோவாஸ் B. யேத்தேர் C. அபிமெலேக் D. பூரா 9 / 50 9. என் மகன் பின்னர் இடித்துப் போட்ட பாகாலின் பலிபீடம் என்னுடையது. நான் யார்? A. யோவாஸ் B. கிதியோன் C. சேபா D. யேத்தேர் 10 / 50 10. நான் மெசொப்பொத்தாமியாவின் ராஜா; எட்டு ஆண்டுகள் இஸ்ரவேலரை ஒடுக்கினேன். நான் யார்? A. எக்லோன் B. கூசான்-ரிசாத்தாயீம் C. யாபீன் D. சீகோன் 11 / 50 11. கிபியாவின் துஷ்டர்களை இஸ்ரவேலரிடம் ஒப்புக்கொடுக்க மறுத்தோம். நாங்கள் யார்? A. எப்பிராயீமியர் B. தாணியர் C. பென்யமீனியர் D. யூதா மக்கள் 12 / 50 12. நான் பூவாவின் மகனும், தோதோவின் பேரனும் ஆவேன். நான் இருபத்து மூன்று ஆண்டுகள் இஸ்ரவேலை நியாயந்தீர்த்தேன். நான் யார்? A. யாயீர் B. தோலா C. எப்தா D. ஏலோன் 13 / 50 13. முன்பு எனக்கு லூஸ் என்று பெயர். நான் யார்? A. பெத்தேல் B. எபிரோன் C. ஓர்மா D. பேசேக் 14 / 50 14. கிதியோனின் எழுபது மகன்கள் அனைவரும் அபிமெலேக்கினால் கொல்லப்பட்டனர். A. சரி B. தவறு 15 / 50 15. கிபியாவில் இருந்த முதியவர் முதலில் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர். A. சரி B. தவறு 16 / 50 16. அந்த லேவியன் முதலில் எப்பிராயீம் மலைநாட்டைச் சேர்ந்தவன். A. சரி B. தவறு 17 / 50 17. சிம்சோனின் பெற்றோர், அவன் பெலிஸ்திய ஸ்திரீயை விரும்பியது கர்த்தரால் உண்டானது என்பதை அறிந்திருந்தனர். A. சரி B. தவறு 18 / 50 18. எப்பிராயீமியர் எப்தாவின் வீட்டை நெருப்பால் எரித்துவிடுவோம் என்று மிரட்டினர். A. சரி B. தவறு 19 / 50 19. யூதாவும் சிமியோனும் கானானியருக்கு எதிராக ஒன்றாகப் போரிட்டனர். A. சரி B. தவறு 20 / 50 20. கிதியோன் எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்? A. எப்பிராயீம் B. மனாசே C. இசக்கார் D. காத் 21 / 50 21. எந்தக் கோத்திரத்தார் ஆட்டுத்தொழுவங்களின் நடுவில் தங்கியிருந்தார்கள்? A. தாண் B. காத் C. ரூபன் D. ஆசேர் 22 / 50 22. பாராக் எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்? A. செபுலோன் B. இசக்கார் C. பென்யமீன் D. நப்தலி 23 / 50 23. ஒத்னியேல் எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்? A. பென்யமீன் B. சிமியோன் C. எப்பிராயீம் D. யூதா 24 / 50 24. "ஷிபோலேத்" என்ற உச்சரிப்பு சோதனையால் எப்பிராயீமியர் யாரிடமிருந்து வேறுபடுத்தப்பட்டனர்? A. கீலேயாதியர் B. பென்யமீனியர் C. செபுலோனியர் D. அம்மோனியர் 25 / 50 25. தோலா எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவன்? A. செபுலோன் B. இசக்கார் C. எப்பிராயீம் D. மனாசே 26 / 50 26. சீகேமை அழித்த பிறகு அபிமெலேக்கு எந்த நகரத்திற்குச் சென்றான்? A. பேர் B. ஓப்ரா C. தேபேஸ் D. சுக்கோத் 27 / 50 27. கிதியோன் முதலில் அப்பம் கேட்ட நகரம் எது? A. பெனுவேல் B. சுக்கோத் C. ஓப்ரா D. சீகேம் 28 / 50 28. கர்த்தருடைய தூதன் எந்த ஊரில் இருந்த கர்வாலிமரத்தின்கீழ்தோன்றினார்? A. ஓப்ரா B. சீலோ C. ராமா D. பெத்தேல் 29 / 50 29. கர்த்தர் சீசெராவின் படையை எந்த ஆற்றங்கரையில் தோற்கடித்தார்? A. யோர்தான் B. அர்னோன் C. கீசோன் D. யாப்போக்கு 30 / 50 30. யோசுவா எங்கு அடக்கம் செய்யப்பட்டார்? A. எபிரோன் B. திம்னாத்ஏரேஸ் C. சீகேம் D. போகீம் 31 / 50 31. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: கிதியோனின் 300 வீரர்கள் எடுத்துச் சென்றிராத பொருள் எது? A. எக்காளம் B. பானை C. தீவட்டி D. கேடயம் 32 / 50 32. "விழித்தெழு, விழித்தெழு" என்ற சொற்றொடர் எத்தனை முறை வருகிறது? A. 2 B. 3 C. 4 D. 5 33 / 50 33. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: தெபோராளின் பாடலில் குறிப்பிடப்படாத கோத்திரம் எது? A. ரூபன் B. தாண் C. சிமியோன் D. இசாக்கார் 34 / 50 34. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: சீசெராவின் மரணத்துடன் தொடர்புடைய பொருள் A. கூடார ஆணி B. சுத்தியல் C. கூடாரம் D. பட்டயம் 35 / 50 35. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: மீகாவின் ஆராதனைப் பொருட்கள் A. ஏபோத் B. குடும்ப விக்கிரகங்கள் C. உடன்படிக்கைப் பெட்டி D. செதுக்கிய சிலை 36 / 50 36. பாராக் உடன் தாபோர் மலையின்மேல் சென்றவர்கள் எத்தனை பேர்? A. 5000 B. 10000 C. 8000 D. 12000 37 / 50 37. பென்யமீனர்கள் ரிம்மோன் கன்மலையில் எத்தனை மாதங்கள் தங்கியிருந்தனர்? A. 4 B. 3 C. 2 D. 6 38 / 50 38. மீகாவின் வீட்டிற்குள் சென்று செதுக்கிய சிலையையும் ஏபோதையும் எடுத்துச் சென்றவர்கள் எத்தனை பேர்? A. 3 B. 4 C. 5 D. 6 39 / 50 39. மீகா லேவியனுக்கு ஆண்டுதோறும் எத்தனை சேக்கல் வெள்ளியைக் கூலியாகக் கொடுப்பதாகச் சொன்னான்? A. 5 B. 10 C. 15 D. 20 40 / 50 40. பெலிஸ்தியரின் ஒவ்வொரு அதிபதியும் தெலீலாளுக்கு எத்தனை வெள்ளிக்காசுகளை வாக்குறுதி அளித்தனர்? A. 1000 B. 1050 C. 1100 D. 1200 41 / 50 41. கிதியோனின் வேலைக்காரனின் பெயர் என்ன? A. யேத்தேர் B. பூரா C. யோவாஸ் D. யாயீர் 42 / 50 42. ஏகூத் கொன்ற மோவாபின் ராஜாவின் பெயர் என்ன? A. பாலாக் B. மேஷா C. எக்லோன் D. ஓக் 43 / 50 43. போகீமில் பேசிய தூதருக்கு வழங்கப்பட்ட பட்டம் என்ன? A. கர்த்தருடைய தீர்க்கதரிசி B. கர்த்தருடைய தூதனானவர் C. சேனைகளின் தலைவன் D. தேவனுடைய ஆசாரியன் 44 / 50 44. லேகியில் தோன்றிய நீரூற்றுக்கு என்ன பெயர் வைக்கப்பட்டது? A. பேர்லகாயிரோயி B. என்கேதி C. எந்நக்கோரி D. ஆரோத் 45 / 50 45. யெப்தாவின் தந்தையின் பெயர் என்ன? A. கிலெயாத் B. மாகீர் C. சீகோன் D. தோப் 46 / 50 46. யோதாம் ______ மலையின் உச்சியில் நின்று உரத்த சத்தமாகப் பேசினான். A. கர்மேல் B. தாபோர் C. கெரிசீம் D. ஏபால் 47 / 50 47. "நம்மில் ஒருவனும் தன் குமாரத்தியைப் பென்யமீனருக்கு விவாகம்பண்ணிக்கொடுப்பதில்லை" என்று இஸ்ரவேலர் ______ இல் சத்தியம் செய்திருந்தனர். A. பெத்தேல் B. மிஸ்பா C. சீலோ D. கிபியா 48 / 50 48. கர்த்தருடைய தூதன் ______ லிருந்து போகீமுக்கு வந்தார். A. பெத்தேல் B. எபிரோன் C. சீலோ D. கில்கால் 49 / 50 49. லேவியனுடைய வேலைக்காரன் ______ பட்டணத்தில் தங்கலாம் என்று ஆலோசனை கூறினான்; ஆனால் லேவியன் மறுத்தான். A. ஏவியர் B. எபூசியர் C. அமோரியர் D. பெலிஸ்தியர் 50 / 50 50. லாயீஸைப் பிடித்தபின் தாண் கோத்திரத்தார் அந்த நகரத்திற்கு ______ என்று பெயரிட்டனர். A. தாண் B. மகானேதாண் C. லேஷேம் D. கேதேஸ் By Wordpress Quiz plugin